ஆப்நகரம்

எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்களே: பிரபாஸ்

காதல் வதந்தி குறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் பிரபாஸ்

Samayam Tamil 30 Oct 2019, 10:42 am
பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் உள்ளது என்று கடந்த சில வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil prabhas


அந்த சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் உள்ளது. ஆனால் தங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே, காதல் இல்லை என்று பல முறை பிரபாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த வதந்தி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் பிரபாஸ் இந்த காதல் வதந்தி குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, 'நானும் அனுஷ்காவும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளோம். எங்களுக்குள் 11 ஆண்டு கால நட்பு உள்ளது. மற்றவர்கள் நினைப்பது போல், நிஜமாகவே எங்களுக்குள் காதல் இருந்தால் அதனை ஏன் நாங்கள் மறைக்க வேண்டும்.

அஜித்தின் வலிமை படத்தில் நானா?: நஸ்ரியா விளக்கம்

அப்படி மறைக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயமே இல்லை. இருவரில் யாராவது ஒருவருக்கு திருமணம் நடக்கும் வரை இந்த வதந்தி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில், தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்தார். எங்களைப் பற்றி பரவி வரும் வதந்தியை எப்படி நிறுத்துவது என்றே தெரியவில்லை.

வாவ்... எகிப்து நாட்டில் பிகில் திரைப்படம் வெளியாகிறது.. குஷியில் விஜய் ரசிகர்கள்!

நிச்சயம் ஒரு நாள் நான் திருமணம் செய்து கொள்வேன். அப்போது தான் இந்த வதந்தி முடிவுக்கு வரும். சமீபத்தில் திருமணம் பற்றிய எண்ணம் வந்தது. ஆனால் அப்போது பட வேலைகளில் பிசியாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என்று நம்புகிறேன்' என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்