ஆப்நகரம்

மைசூர் அரண்மனையில் டூயட் பாடும் பிரபுதேவா - நிவேதா பெத்துராஜ்

பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் இணைந்து டூயட் பாடும் பாடல் மைசூர் அரண்மனையில் படமாக்கப்படவுள்ளது.

Samayam Tamil 2 Jan 2019, 3:55 pm
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்து வரும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ், துபாயில் உள்ள தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு இந்த வாரம் சென்னை திரும்புகிறார். அவர் வருகைக்காக படக்குழு காத்திருக்கிறது. அவர் வந்தவுடன் படக்குழு மைசூர் செல்லவுள்ளனர்.
Samayam Tamil prabhudeva


இந்நிலையில் மைசூர் அரண்மனை பின்னணியில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் டூயட் பாடல் ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் படமாக்குகின்றனர். இதற்கிடையே, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்தில் கார்த்தியுடன் நடிப்பது குறித்த ஒப்பந்தமும் இந்த மாதத்தில் இறுதிசெய்யப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்