ஆப்நகரம்

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் படத்தில் பிரபு தேவா: இன்று முதல் படப்பிடிப்பு!

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.

Samayam Tamil 15 Jul 2021, 2:28 pm
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து தற்போது இயக்குநராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார். பிசியாக படங்கள் இயக்கி வந்தாலும், தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Samayam Tamil Prabhu_Deva
Prabhu_Deva


ஹரஹர மஹாதேவகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபு தேவா. இந்த திரைப்படத்தை தனுஷின் முன்னாள் மேலாளரும், ‘வெள்ளை யானை’, ‘எனிமி’ படங்களின் தயாரித்த வினோத்குமார் தயாரிக்க உள்ளார்.

இந்தப்படத்தின் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இந்நிலையில் இன்று முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக டி.இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்: வெளியானது ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் பட மேக்கிங் வீடியோ!
பிரபு தேவா நடிப்பில் ஏற்கனவே பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உள்ளிட்ட படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. இதில் பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. பஹீரா திரைப்படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். அண்மையில் வெளியான இந்தப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்