ஆப்நகரம்

போலீஸ் அதிகாரியாகும் நடிகர் பிரபுதேவா!

ஏ.சி.முகில் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 19 May 2018, 3:20 pm
ஏ.சி.முகில் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil prabhudeva


நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியானார். தற்போது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மெர்குரி’. இந்தப் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

தற்போது பிரபுதேவா ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்நிலையில் பிரபுதேவா தமிழில் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.சி. முகில் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்