ஆப்நகரம்

நடிகர்களை மிட்டவது அமைச்சர்கள் செய்யும் காரியமா ? பிரகாஷ்ராஜ் கேள்வி

அமைச்சர்கள் மிரட்டுவது போல் பேசுவது தவறு என்று பிரகாஷ் ராஜ் பேட்டியளித்துள்ளார்.

TNN 23 Nov 2017, 3:48 pm
அமைச்சர்கள் மிரட்டுவது போல் பேசுவது தவறு என்று பிரகாஷ் ராஜ் பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil prakash raj says how a minister can threaten actors
நடிகர்களை மிட்டவது அமைச்சர்கள் செய்யும் காரியமா ? பிரகாஷ்ராஜ் கேள்வி


சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வருத்தமளிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திரையுலகம் எந்த நிலையில் உள்ளது என்பதே இவரது தற்கொலை வெளிப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற முடிவை யாரும் எடுக்கக்கூடாது. இதுபோன்ற பல தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அது யாருக்கும் தெரியாது . நடிகர்கள் கறுப்புப்பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். முதலில் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தையும் எங்களையும் வந்து அணுகலாம். 'பத்மாவதி' திரைப்படத்தில் நடித்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுவதும், அதுவும் ஆளுங்கட்சி சார்ந்தவர்களே இது போன்ற செயலில் ஈடுபவது, நாம் எந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்