ஆப்நகரம்

#MeToo: பாலியல் புகார் கூறினால் பெண்களின் வாயை அடைப்பீர்களா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!

பெங்களூரு: நடிகை சுருதி ஹரிஹரன் விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

Indiatimes 26 Oct 2018, 11:40 am
கன்னட திரையுலகில் மீ டூ இயக்கத்தை நடிகை சுருதி ஹரிஹரன் தொடங்கி வைத்துள்ளார். அவர் பிரபல நடிகர் அர்ஜூனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ளார். இது ஏராளமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல தைரியம் அளித்துள்ளது.
Samayam Tamil Prakash Raj


சுருதி ஹரிஹரன் குற்றச்சாட்டிற்கு சிலர் ஆதரவாக செயல்பாட்டாலும், சிலர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், சுருதிக்கு தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த அவர், ’சுருதி ஹரிஹரன் மட்டுமல்லாது, இதேபோல் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கு ஆதரவளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை நாட்களாக ஆதரவற்று, அவமானத்தால் தனக்குள் வலியை அனுபவித்து வந்ததை நாம் உணர வேண்டும். இந்த குற்றச்சாட்டை அர்ஜூன் மறுத்தாலும், சுருதியிடம் மன்னிப்பு கேட்பதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் கன்னடத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், சுயநல எண்ணங்களால் மீ டூ இயக்கம் தவறான பாதைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பாலியல் புகார் கூறும் பெண்களின் வாயை அடைக்க முயற்சி நடக்கிறது.

அர்ஜூன் எனது நீண்ட கால நண்பர். அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே யார் ஒருவரைப் பற்றியும் அர்த்தமற்ற பேச்சை கூற ஒருபோதும் விரும்பியதில்லை. சுருதி சந்தர்ப்பதவாதி அல்ல.

அவர் மிகவும் திறமையான, வலிமையான பெண்மணி. நம்மைப் போலவே இதே சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் திரைத்துறையின் மூத்த நடிகர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Prakash Raj says vested interest trying to derail the Me Too movement.

அடுத்த செய்தி

டிரெண்டிங்