ஆப்நகரம்

கடன் வாங்கி தொடர்ந்து உதவி செய்வேன்! ஏனென்றால்.. பிரகாஷ் ராஜ் கூறிய காரணம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நான் கடன் வாங்கியாவது தொடர்ந்து உதவி செய்வேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

Samayam Tamil 20 Apr 2020, 4:02 pm
நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் எப்போதும் அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.
Samayam Tamil Prakash Raj


தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரகாஷ் ராஜ் உதவி செய்து வருகிறார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார் பிரகாஷ் ராஜ். மேலும் உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கும் உணவு வழங்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தங்க இடம் இல்லாமல் இருந்த 30க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர் தனது விவசாய பண்ணையில் தங்க வைத்துள்ளார். அவர்களை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறியிருந்தார் பிரகாஷ்ராஜ்.

மேலும் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு உதவி செய்து வருவதால் தன்னிடம் உள்ள பணம் தீர்ந்து வருகிறது என கூறியுள்ள பிரகாஷ்ராஜ், கடன் வாங்கி அனைவருக்கும் தொடர்ந்து உதவி செய்வேன் என கூறியுள்ளார்.

"ஏனென்றால் என்னால் பணத்தை மீண்டும் சம்பாதித்து கொள்ள முடியும் என தெரியும். தற்போது இந்த மோசமான நிலைமையில் இருந்து மனித இனம் மீள வேண்டியது தான் அவசியம்" என குறிப்பிட்டுள்ளார் அவர்.


பிரகாஷ் ராஜ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் அண்ணாத்த, தலைவி, அக்னி சிறகுகள், அசுரன் தெலுங்கு ரீமேக் 'நாரப்பா' போன்ற படங்களில் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்