ஆப்நகரம்

லாக்டவுனில் 21 நாட்களில் 75 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை கொடுத்த கார்த்தி, சூர்யா ஹீரோயின்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகை பிரனிதா உணவளித்து வருகிறார்.

Samayam Tamil 27 Apr 2020, 2:10 pm
உதயன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பிரனிதா சுபாஷ். கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலமானார். பின்னர் சூர்யாவுடன் சேர்ந்து மாசு படத்தில் நடித்தார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil pranitha subhash


தமிழ் தவிர்த்து அவர் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி அளித்தார் பிரனிதா.

இந்நிலையில் கஷ்டப்படுபவர்களுக்கு உணவு சமைத்து வழங்கி வருகிறார் அவர். லாக்டவுன் துவங்கிய 21 நாட்களில் அவர் 75 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை கொடுத்துள்ளார்.

பிரனிதா செய்யும் இந்த நல்ல காரியம் குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். லாக்டவுனால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பிரனிதா தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கொடுத்த 5 ஆயிரத்தை அஜித் ரசிகருக்கு கொடுத்து உதவிய தளபதி ரசிகர்

சில நடிகைகள் ஒர்க்அவுட் செய்வது, சமைப்பது, தலையணை சவாலை ஏற்பது என்று புகைப்படம் வெளியிடும் நிலையில் பிரனிதா செய்யும் காரியம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்