ஆப்நகரம்

ட்விட்டரில் இருந்து விலகுகிறேனா? பிரசன்னா விளக்கம்

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறப்போவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பிரசன்னா.

Samayam Tamil 2 May 2020, 12:41 pm
நடிகர் பிரசன்னா சமீபகாலமாக வில்லன் ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார். மாஃபியா படத்தின் முதல் பாகத்தில் அவர் வில்லனாக நடித்திருந்த நிலையில் அடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தில் அவர் நடிக்கிறார்.
Samayam Tamil Prasanna


இந்நிலையில் சமீபத்தில் பிரபாகரன் பற்றிய சர்ச்சையில் சிக்கியிருந்த மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு ஆதரவாக பிரசன்னா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஒரு நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்து அழைத்ததை தமிழ்நாட்டில் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். துல்கர் சல்மான் விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை விமர்சித்தனர். அது பற்றி நடிகர் பிரசன்னா போட்டிருந்த ட்விட்டில் 'இது தவறான புரிதல்' என கூறி துல்கரின் மன்னிப்பு கேட்டிருந்தார்.

துல்கருக்கு ஆதரவாக பேசிய பிரசன்னாவையும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் விமர்சித்தனர். அவரது குடும்பத்தினரையும் தவறான பேசினர் என கூறப்படுகிறது. அதனால் சமூக வலைத்தளங்களை விட்டு பிரசன்னா வெளியேற முடிவு செய்துள்ளார் என சமீபத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில் அந்த செய்தி பற்றி விளக்கம் கொடுத்துள்ள பிரசன்னா, "நோ.. நான் சமூக வலைத்தளத்தில் இருண்டுஹ் வெளியேறவில்லை. இனி வெளியேறப்போவதும் இல்லை. இங்கு வெறுப்பை காட்டுபவர்களை விட அன்பு செலுத்துபவர்களி அதிகம் சம்பாதித்துள்ளேன்" என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்