ஆப்நகரம்

பிரத்யுஷா பானர்ஜியின் காதலன் ராகுல் ராஜ் சிங் மீது வழக்குப்பதிவு

மும்பையைச் சேர்ந்த டிவி நடிகை பிரத்யுஷா பேனர்ஜி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராகுல் ராஜ் சிங், குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 19 Sep 2016, 3:48 pm
மும்பை: மும்பையைச் சேர்ந்த டிவி நடிகை பிரத்யுஷா பேனர்ஜி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராகுல் ராஜ் சிங், குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pratyusha banerjees boyfriend rahul raj singh now booked for drunk driving
பிரத்யுஷா பானர்ஜியின் காதலன் ராகுல் ராஜ் சிங் மீது வழக்குப்பதிவு


கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அந்தேரியில் உள்ள உணவகத்தில் பெண் தோழியிடம் இணைந்து நடிகை ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது தனது முன்னாள் காதலி சலோனி ஷர்மாவுடன் குடிபோதையில் கார் ஓட்டியதாக ராகுல் மீது சான்டாகுரூஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துக் கொண்டார் பிரத்யுஷா. இது தொடர்பாக ராகுல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சலோனி பல முறை பிரத்யுஷாவுடன் சண்டையிட்டதாகவும் கூறப்பட்டது. இவ்வழக்கில் சலோனியிடம் பணம் மோசடி செய்ததாக ராகுல் மீது குற்றம்சாட்டப்பட்டு, பிரத்யுஷா தற்கொலை வழக்கில் ராகுல் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்