ஆப்நகரம்

இசை ரசிகர்கள் அனைவரும் எஸ்.பி.பி.க்காக பிரார்த்தனை செய்யுங்கள்: ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ்

மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 14 Aug 2020, 7:14 pm
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவே கடந்த 5ம் தேதி அவரை சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தனக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றும், விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என்றும் எஸ்.பி.பி. வீடியோ வெளியிட்டார்.
Samayam Tamil sp balasubrahmanyam


எஸ்.பி.பி. தைரியமாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் நிம்மதியாக இருந்தார்கள். இந்நிலையில் எஸ்.பி. பியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ். பி. பி. குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாடகர் எஸ்.பி.பி. நிலைமை கவலைக்கிடம்

இந்நிலையில் எஸ்.பி. பி. பற்றி திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தனுஷ்- தயவு செய்து எஸ்.பி. பி. சாருக்காக பிரார்த்தனை செய்யவும்.

ஏ.ஆர். ரஹ்மான்- இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து இந்த லெஜண்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். #SPBalasubrahmanyam தன் அருமையான குரலால் நமக்கு இன்பத்தை கொடுத்துள்ளார்.

அனிருத்- விரைவில் குணமடையுங்கள் எஸ்.பி.பி. சார். நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

கிச்சா சுதீப்- லெஜண்ட் எஸ்.பி. பி. சார் விரைவில் குணமடைய நாம் பிரார்த்தனை செய்வோம்.

பிரசன்னா- எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

எஸ்.பி. பி. குணமடைய பிரார்த்தனை செய்வதாக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதிசயம் நடக்கும், எஸ்.பி. பி. குணமடைந்து வீடு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்