ஆப்நகரம்

அருணாச்சலம் ஸ்டைலில் மூன்று நாளுக்கு 3 கோடியை செலவு செய்த பிரபல நடிகை!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, மூன்று நாட்களுக்கு ரூ.3 கோடியை ஆடம்பரமாக செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 28 Nov 2018, 5:40 pm
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
Samayam Tamil priyanka-chopra


தற்போது பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் என்பரை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களுடைய திருமண நிச்சயத்தார்த்தம் அண்மையில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.

இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெறவுள்ளது. மேலும் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெறவுள்ளதாம். இங்கு 64 ஆடம்பர அறைகள் இருக்கிறதாம். அதில் 22 பேலஸ் ரூமும், 42 சூட்டும் உள்ளதாம். இதில் இப்போதைக்கு மணமக்கள் 40 அறைகளை புக் செய்துள்ளார்களாம். மொத்தமாக ஒரு நாள் இரவுக்கு வாடகை ரூ 64.40 லட்சமாம். கல்யாண ஜோடிகள் 3 நாளுக்கு ரூ 3.2 கோடி இதற்கு கொடுத்திருக்கிறாம்.

மேலும் ஒரு நபர் சாப்பாட்டிற்கு 18 ஆயிரம். இன்னும் பல செலவுகள் உள்ளன. அவையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், அவ்வளவுதான் நமக்கு மயக்கமே வந்துவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்