தல அஜித்குமார் நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் "பிங்க்".
அந்தப் படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் "நேர் கொண்ட பார்வை". முழுக்க பெண்ணியப் படமாக பெண்களின் சுதந்திரத்தையும் , உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண்கள் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசிய படம் தான் பிங்க்.
பெண்கள் மிக முக்கியப் பாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில் அமிதாப் சிறிய நேரமே வரக்கூடிய முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியான ஒரு படத்தில் தமிழின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் நடித்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியமே!
Also Read: Ajith: சென்னை முழுவதும் 22 திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!
Also Read: Suriya: சூர்யாவுக்கு புதிய சிக்கல்? ரிலீஸிலிருந்து பின் வாங்கிய காப்பான்!
இந்திப் படம் போல் இல்லாமல் தமிழ்ப் படத்தில் அஜித்தின் கேரக்டர் அதிக நேரம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் ஆக்ஷன் கலந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித் ஜோடியாக நடித்துள்ளார். கல்கி கொச்சிலின், ஸ்ரதா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
Also Read: காதல், ஆக்ஷன் த்ரில்லர் கதை எப்படி உருவாகும்? இயக்குனர் மகிழ் திருமேனி!
இப்படம் வியாபார சிக்கல்களில் இருந்ததாக வதந்தி பரவிய நிலையில் தற்போது ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் இன்று காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நேர் கொண்ட பார்வை முன் திரையிடல் காட்சி தொடங்க உள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மனைவியின் கனவு, இதன் மூலம் நிறைவேற்றியுள்ளது என்றும், இதற்கு மிக முக்கிய காரணமான தல அஜித் குமார், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் "நேர் கொண்ட பார்வை". முழுக்க பெண்ணியப் படமாக பெண்களின் சுதந்திரத்தையும் , உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண்கள் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசிய படம் தான் பிங்க்.
பெண்கள் மிக முக்கியப் பாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில் அமிதாப் சிறிய நேரமே வரக்கூடிய முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியான ஒரு படத்தில் தமிழின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் நடித்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியமே!
Also Read: Ajith: சென்னை முழுவதும் 22 திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!
Also Read: Suriya: சூர்யாவுக்கு புதிய சிக்கல்? ரிலீஸிலிருந்து பின் வாங்கிய காப்பான்!
இந்திப் படம் போல் இல்லாமல் தமிழ்ப் படத்தில் அஜித்தின் கேரக்டர் அதிக நேரம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் ஆக்ஷன் கலந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித் ஜோடியாக நடித்துள்ளார். கல்கி கொச்சிலின், ஸ்ரதா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
Also Read: காதல், ஆக்ஷன் த்ரில்லர் கதை எப்படி உருவாகும்? இயக்குனர் மகிழ் திருமேனி!
இப்படம் வியாபார சிக்கல்களில் இருந்ததாக வதந்தி பரவிய நிலையில் தற்போது ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் இன்று காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நேர் கொண்ட பார்வை முன் திரையிடல் காட்சி தொடங்க உள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மனைவியின் கனவு, இதன் மூலம் நிறைவேற்றியுள்ளது என்றும், இதற்கு மிக முக்கிய காரணமான தல அஜித் குமார், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.