ஆப்நகரம்

வடிவேலுவை வச்சு செய்யும் ஷங்கர்: இம்சை அரசனைத் தொடர்ந்து பேய் மாமாவுக்கும் ஆப்பு!

இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்சனையால் தற்போது வடிவேலுவின் பேய் மாமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Mar 2019, 5:27 pm
இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்சனையால் தற்போது வடிவேலுவின் பேய் மாமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil vadi


தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வைகைப் புயல் வடிவேலு. கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படத்தில் நடிப்பதற்கு வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால், படம் தொடங்கிய 10 நாட்களில் வடிவேலு படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளவில்லை. இதனால், படக்குழுவினருக்கும், வடிவேலுவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், படத்திற்காக போடப்பட்ட பலகோடி மதிப்புள்ள செட்டும் வீணாக்கப்பட்டது. இதையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஷங்கருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கடந்தாண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். பலமுறை வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சமாதானமும் செய்யப்படவில்லை. இதனால், வடிவேலுவிற்கு ரெட் கார்டு போடப்பட்டது. இந்தப் படம் முடிக்கும் வரையில், வேறு எந்த படத்திலும் வடிவேலு நடிக்கக் கூடாது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சின தினங்களுக்கு முன்பு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் பேய் மாமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது குறித்து கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்கம் பேய் மாமா படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரத்தை நேரில் அழைத்துப் பேசி இப்படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இனி, வடிவேலு ஷங்கர் தயாரிப்பில் உருவாகும் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடிக்காமல் வேறு எந்த படங்களிலும் நடிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்