ஆப்நகரம்

தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு 1 கோடி அளித்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர்!

பிரபல மலையாளப்பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தமிழக முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்.

Samayam Tamil 12 Jun 2021, 12:26 pm
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைய துவங்கியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரபல மலையாளப்பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்.
Samayam Tamil கோகுலம் கோபாலன்
கோகுலம் கோபாலன்


அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் கோகுலம் கோபாலன் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார். இவர் தனது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பழசிராஜா, காயங்குளம் கொச்சுண்ணி போன்ற படங்களை பிரமாண்ட தயாரித்துள்ளார். மலையாளத்தில் சித்தார்த் அறிமுகமான கம்மார சம்பவம், ஜீத்து ஜோசப் இயக்கிய மிஸ்டர் அண்ட் மிசஸ் ரவுடி, ரோஷன் ஆண்ட்ரூவின் பிரதி பூவன்கோழி உள்பட ஏராளமான திரைப்படங்களை இவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்திக்கு செல்லும் விஜய்யின் மாஸ்டர்: ஹீரோ யார் தெரியுமா..?
தற்போது வினயன் இயக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு, டொவினோ தாமஸ் நடிக்கும் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார். தமிழில் தனுசுராசி நேயர்களே, கமலின் தூங்காவனம் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்நிலையில் மலையாளப்பட தயாரிப்பாளர் ஒருவர் தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் அளித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர். அதே போல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்