ஆப்நகரம்

‘இரவாக்காலம்’ படத்தைப் பார்த்து பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘இரவாக்காலம்’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 3 Apr 2018, 3:07 pm
தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘இரவாக்காலம்’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்.
Samayam Tamil hema-rukmani


ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் நடிகர் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ என்ற படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி. இந்தப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் கூட்டியது. இது இவர்களின் 100 வது படம் என்பதால் பெரும் பட்ஜெட்டில் எடுத்திருந்தனர். ஆனாலும் சில கோடிகள் நஷ்டம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனாலும் படத்தை எடுத்ததில் சந்தோஷம் என படக்குழு கூறியது.


இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணி அண்மையில் இயக்குனர் அஸ்வின் இயக்கிய ‘இரவாக்காலம்’ படத்தின் சில நிமிட காட்சியை பார்த்துவிட்டு ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். இயக்குனர் அஸ்வின், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. ‘இரவாக்காலம்’ படத்தின் நாயகனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்