ஆப்நகரம்

அஜித் இத பண்ணமாட்டார் ; விஜய் பண்றது அரசியல் - கே ராஜன்

தயாரிப்பாளர் கே ராஜன், சமயம் தமிழுக்கு கொடுத்துள்ள பேட்டியில், அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 25 Feb 2020, 2:48 pm
அஜித் ரசிகர்களை சந்திக்காவிட்டாலும் அவரைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் எனவும், விஜய், எம்ஜிஆர், விஜயகாந்த் போல தனது ரசிகர்களை சந்தித்து பேசுகிறார் எனவும் தயாரிப்பாளர் கே ராஜன் சமயம் தமிழுக்கு கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
Samayam Tamil ajith vs vijay


விஜய் படத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து சொன்ன விஜய்யை, பாஜகவினர் எதிர்த்தனர். தற்போதும் கூட மாஸ்டர் படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள். எச் ராஜா என்பவர் விஜய்யை ஜோசப் விஜய் எனக் கூறி அவரை கிறித்துவராக மக்கள் முன் நிறுத்துவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். விஜய் எந்த மதத்தை பின்பற்றினாலும், எங்களுக்கு அவர் தமிழர், இரண்டாவது இந்தியர். எச் ராஜா இப்படி பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். மக்கள் அவரை நம்பமாட்டார்கள் என்றார்.

மேலும் அஜித் குறித்து பேசிய கே ராஜன், அஜித் பெரிய அதிர்ஷ்டசாலி அவருக்கு எங்கு மச்சம் இருக்கிறது என்பது தெரியவில்லை. தனது ரசிகர்களை காணாவிட்டாலும் கூட, அவர்களை சந்திக்க விரும்பாதபோதும் கூட, அவரது ரசிகர்கள் இவரைக் காண அலைமோதுகின்றனர்.

எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் ரசிகர்களை மிகவும் நேசித்தவர்கள். வாரம் ஒருமுறை சந்திக்கும் பண்பு கொண்டவர்கள். ரஜினியும் அவ்வப்போது சந்திப்பார். விஜய் ரசிகர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திக்கிறார். பட புரோமோஷன், இசை வெளியீடு விழாக்களில் அவர்களுடன் பேசுகிறார். ஆனால் அரசியல் பேசக்கூடாது. அது தயாரிப்பாளரின் படத்தை புரமோட் செய்யும் இடம். வேண்டுமென்றால் தனியாக அரசியல் பேசிக்கொள்ளட்டும் என கே ராஜன் தெரிவித்தார்.

கே ராஜன் மேலும் பேசிய பல விசயங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்