ஆப்நகரம்

பிரபல படத் தயாரிப்பாளர் பி.எஸ்.வி ஹரிஹரன், வறுமையில் உயிரை விட்ட பரிதாபம்!

30க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த பி.எஸ்.வீரப்பாவின் மகன், பி.எஸ்.வி.ஹரிகரன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வறுமையில் உயிரை விட்ட சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 23 Nov 2018, 6:48 pm
சினிமாவில் நடித்தால் எப்போதும் சொகுசான வாழ்க்கை வாழலாம் என பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் பட தயாரிப்பாளர்களுக்கு அப்படி இல்லை. படத்தில் போட்ட பணம் திரும்ப வருமா என்பதே கேள்விக்குறிதான். ‘மன்னாதி மன்னன்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘மீனவ நண்பன்’ போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. அவர் பல படங்களை தயாரித்துள்ளார்.
Samayam Tamil psv-hariharan


அவரது மகன் பி.எஸ்.வி. ஹரிகரன். வீரப்பாவை மகன் பிஎஸ்வி ஹரிகரன் தயாரிப்பு பணியை தொடங்கினார். இவர் 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார். படத் தயாரிப்பால் கடும் ந்ஷ்டமடைந்தார். இதனால் தனது சொத்துக்களை இழந்தார். அவர் கடும் வறுமையில் சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அவரின் வறுமை பற்றி அறிந்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் முன்பு வீட்டில் தடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் நேற்று மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்