ஆப்நகரம்

நடிகர் வடிவேலு மீது புகாரளித்துள்ள இயக்குநர் ஷங்கர்!

வடிவேலு படப்பிடிப்பிற்கு வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் சங்கர் அளித்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவிடம் தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது

TNN 19 Nov 2017, 8:20 pm
வடிவேலு படப்பிடிப்பிற்கு வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் சங்கர் அளித்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவிடம் தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.
Samayam Tamil producers committee had sent a notice to actor vadivelu
நடிகர் வடிவேலு மீது புகாரளித்துள்ள இயக்குநர் ஷங்கர்!


இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர்.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீண்டும் ஹீரோவாக நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சங்கர் தயாரிக்கிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது வடிவேலு தனக்குப் பிடித்த ஆடை வடிவமைப்பாளரை பரிந்துரை செய்ததாகவும், ஆனால், படக்குழுவினர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நடிகர் வடிவேலு சில தினங்களாக படப்பிடிப்பிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மிகப் பெரிய பொருட்செலவில் அரங்குகள் அமைத்தும், படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இயக்குநர் ஷங்கர் இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது நடிகர் வடிவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்