ஆப்நகரம்

பாபி சிம்ஹாமீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை

அக்னி தேவி வெளியாகியவுடன் பாபி சிம்ஹா, தன் அனுமதியின்று ஒப்பந்தத்தை மீறி, இயக்குநர் தன் டூப் பயன்படுத்தியுள்ளார் என காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனை வாபஸ் பெற தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் பாபி வாபஸ் பெறவில்லை. இதனால் அவர் நடிக்க இடைகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Apr 2019, 5:53 pm
பாபி சிம்ஹா, மூத்த தென் இந்திய நடிகை மதுபாலா நடிப்பில் கடந்த வாரம் வெளியான அக்னி தேவி படம் சுமாராக ஓடியது. ரசிகர்களின் வரவேற்பை அவ்வளவாகப் பெறாத படமாக இருந்தது.
Samayam Tamil bobby.


இதன் இயக்குநர் ஜான் பால்ராஜ். இவரே இப்படத்தை தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்த பாபி சிம்ஹா இயக்குநரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து பாதியில் விலகியதால், இயக்குநர் பால்ராஜ் விஎப்எக்ஸ், டூப் உதவியுடன் மீதி படத்தை எடுத்து முடித்தார். இப்படம் வெளியாகியவுடன் அதிர்ந்துபோன பாபி சிம்ஹா, தன் அனுமதியின்று ஒப்பந்தத்தை மீறி, இயக்குநர் தன் டூப் பயன்படுத்தியுள்ளார் என காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதனை வாபஸ் பெற தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் பாபி வாபஸ் பெறவில்லை. இதனால் அவர் நடிக்க இடைகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்