ஆப்நகரம்

என் குடும்பத்தையே அழ வைத்து விட்டார்: அதிதி மேனன்!

நடிகை பார்வதி நடிப்பில் என் குடும்பத்தையே அழ வைத்துவிட்டார் என்று அதிதி மேனன் கூறியுள்ளார்.

TNN 31 Mar 2017, 4:43 pm
நடிகை பார்வதி நடிப்பில் என் குடும்பத்தையே அழ வைத்துவிட்டார் என்று அதிதி மேனன் கூறியுள்ளார்.
Samayam Tamil put my family to cry aditi menon
என் குடும்பத்தையே அழ வைத்து விட்டார்: அதிதி மேனன்!


நடிகை அதிதிமேனன் ‘பட்டதாரி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். தற்போது இவர் ‘சந்தன தேவன்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை அமீர் இயக்கி வருகிறார். படத்தின் நாயகனாக ஆர்யா நடித்துள்ளார்.

இந்த படத்தில் மதுரைப் பெண்ணாகவே முழுமையாக மாறி நடித்து வருவதாக கூறும் அதிதிமேனனை சமீபத்தில் மலையாள நடிகை பார்வதி மேனன் தன் குடும்பத்தையே அழ வைத்து விட்டார் என்று கூறியுள்ளார். .அதுபற்றி அதிதிமேனன் கூறுகையில், பார்வதி, பகத்பாசில், குஞ்சாகோபோபன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘டேக் ஆப்’. இந்த படத்தை என் குடும்பத்தினருடன் தியேட்டரில் பார்த்தேன்.

ஒவ்வொரு சீனிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பார்வதி மேனன். க்ளைமாக்சில் அவரது நடிப்பைப்பார்த்து நான் அழுது விட்டேன். நான் மட்டுமின்றி என்னுடன் வந்திருந்த எனது அம்மா, தங்கையும்கூட அழுது விட்டார்கள். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் பார்வதிமேனன். அந்த படத்தை பார்த்த பிறகு சினிமாவில் நடித்தால் இந்த மாதிரியான வேடங்களில் நடிக்க வேண்டும். தற்போது சந்தனத்தேவனில் எனக்கு அழுத்தமான வேடம் தான் கொடுத்துள்ளார் அமீர் என்றார் அதிதி மேனன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்