ஆப்நகரம்

Sri Lanka Bomb Blast: இலங்கை குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பினேன் - நடிகை ராதிகா அதிர்ச்சி டுவிட்!

இலங்கை, கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் இருந்து நடிகை ராதிகா அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளார்.

Samayam Tamil 21 Apr 2019, 8:59 pm

இலங்கை தலைநகா் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Radhika


கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோா் பலி - முழுவிபரம்

இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அதே போன்று நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 6 பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Rajasthan Royals: ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லர் விளையாடுவது சந்தேகம்... இதான் காரணம்

ராதிகா அதிர்ச்சி:

இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை ராதிகா, “அட கடவுளே இலங்கையில் குண்டு வெடிப்பு... நான் கொழும்புவின் சின்னமோகன் கிராண்ட் ஹோட்டலில் தான் தங்கி இருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அங்கிருந்து கிளம்பினேன். என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில் இருக்கின்றேன்.” என பதிவிட்டுள்ளார்.

இதை சும்மா விடக் கூடாது... இலங்கை குண்டு வெடிப்பிற்கு தலைவர்கள் பிரலங்கள் கண்டனம்


S Muthiah: மருதநாயகம் படத்தின் நாயகன் எஸ் முத்தையா மரணம் - கமல் வருத்தம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்