ஆப்நகரம்

இந்தி படத்தில் ஆர்வம் காட்டும் ராய்லட்சுமி!

நடிகை ராய்லட்சுமி இந்தி படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

TOI Contributor 28 Apr 2016, 7:04 pm
நடிகை ராய்லட்சுமி இந்தி படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
Samayam Tamil raai laxmi busy with hindi movies
இந்தி படத்தில் ஆர்வம் காட்டும் ராய்லட்சுமி!


ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் ராய்லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அவர், தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தனது கவர்ச்சிகரமான உடலமைப்பை பயன்படுத்தி பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று அவர் எடுத்து அனைத்து முயற்சிகளுமே தோல்வியில்தான் முடிந்தன.

இந்த நிலையில்தான், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கியுள்ள அகிரா படத்தில் கமிட்டாகி நடித்தார் ராய்லட்சுமி. தமிழில் வெளியான ‘மௌனகுரு’ படத்தின் இந்தி ரீமேக்கான இந்த படத்தில் சோனாக்க்ஷி சின்ஹாதான் முக்கிய நாயகி என்றபோதும், ராய்லட்சுமிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வேடமகொடுத்துள்ளாராம் முருகதாஸ்.

அதனால் ‘அகிரா’ படம் திரைக்கு வரும்போது இந்தியில் தனக்கு புதிய படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் ராய்லட்சுமி. ஆனால் செப்டம்பர் மாதம்தான் அகிராவை ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் முருகதாஸ். இதனால் அந்த படத்திற்காக காத்திருக்க வேண்டாம் என்று தீவிர பட வேட்டையில் இறங்கிய ராய்லட்சுமி தற்போது ‘ஜூலி-2’ என்ற இந்தி படத்தை கைப்பற்றி நடித்துக்கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இந்தி படங்களுக்காக மும்பையிலேயே முகாமிட்டிருக்கிறார் ராய் லட்சுமி.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்