ஆப்நகரம்

அடுத்த பேய் படத்திற்கு தயாராகிவிட்ட ராய் லட்சுமி!

நடிகை ராய் லட்சுமி மலையாள இயக்குனர் கே.எஸ்.பாவா இயக்கும் ஒரு பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

TNN 14 Dec 2016, 7:10 pm
நடிகை ராய் லட்சுமி மலையாள இயக்குனர் கே.எஸ்.பாவா இயக்கும் ஒரு பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil raai laxmi ready for next action ghost story in malayalam
அடுத்த பேய் படத்திற்கு தயாராகிவிட்ட ராய் லட்சுமி!


நடிகை ராய் லட்சுமி ‘கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன்பின்னர் பல தமிழ் படங்களில் நடித்தார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் பாலிவுட்டில் ‘ஜூலி -2’ என்ற படத்தை முடித்தார். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது.

இதனிடையே தமிழில் அடுத்தப்படியாக ஒரு பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ராய் லட்சுமி. ஏற்கனவே ‘காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘சவுகார்பேட்டை’ போன்ற பேய் படங்களில் நடித்த ராய் லட்சுமி, இப்போது மலையாள இயக்குநர் கே.எஸ்.பாவா இயக்கும் ஒரு ஹாரர் படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான ஹாரர் படமாக, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

Rai Lakshmi ready for next action ghost story in Malayalam.

அடுத்த செய்தி

டிரெண்டிங்