ஆப்நகரம்

பொம்பளங்கள கேவலப்படுத்தும் ராதாரவியை பாஜகவில் சேர்க்கலாமா?: கொந்தளிக்கும் சின்மயி

ராதாரவி பாஜகவில் சேர்ந்துள்ளது குறித்து ட்விட்டரில் விளாசியுள்ளார் பாடகி சின்மயி.

Samayam Tamil 2 Dec 2019, 11:50 am
நயன்தாராவை தரக்குறைவாக பேசிய பிறகு திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் நடிகர் ராதாரவி. அதன் பிறகு அதிமுகவில் சேர்ந்த அவர் 6 மாதங்களில் அங்கிருந்து கிளம்பிச் சென்று பாஜகவில் சேர்ந்துள்ளார். அவர் பாஜகவில் சேர்ந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின.
Samayam Tamil chinmayi


அதை பார்த்த பாடகி சின்மயி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த ராதாரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பெண்களை கேவலப்படுத்தியுள்ளார். அவர் டப்பிங் யூனியன் தலைவராக உள்ளார். யாராவது அவரை கேள்வி கேட்டாலோ அல்லது திரையுலகில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தாலோ அவர்களுக்கு தடை விதித்துவிடுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



ராதாரவி விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை மென்ஷன் செய்து ட்வீட்டியுள்ளார் சின்மயி. ஸ்மிருதி மேடம். மிஸ்டர் ராதாரவி உங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர் பல நிகழ்ச்சிகள், மேடைகளில் பெண்களை அசிங்கப்படுத்தியுள்ளார்.

நீ எல்லாம் இவ்வளவு பெரிய நடிகன் ஆவன்னு எதிர்பார்க்கலடா: யோகி பாபுவை கலாய்த்த சந்தானம்

அவர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு டப்பிங் யூனியனில் பாலியல் புகார் தெரிவிப்பவர்களை தடை செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார் சின்மயி.



கவிப்பேரரசு வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சின்மயி புகார் அளித்தார். அதன் பிறகு அவர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இது தொடர்பாக தொடர்ந்து ட்விட்டரில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சின்மயி. ஏன், யாருமே வைரமுத்துவை கேள்வி கேட்பது இல்லை என்று சின்மயி பல முறை கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்தார், மாடியில் இருந்து தள்ளப் பார்த்தார்: மாஜி எம்.எல்.ஏ. மகன் மீது நடிகை புகார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்