ஆப்நகரம்

மாதவிடாய், சுகாதரம் பற்றி ராதிகா ஆப்தே அட்வைஸ்

பெண்கள் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.

Samayam Tamil 2 Aug 2018, 12:09 pm
பெண்கள் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.
Samayam Tamil radhika-apte-759


பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ரஜினியுடன் கபாலி படத்தில் நடத்து தமிழ் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்தவர். தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராதிகா, "இன்னும் நம் நாட்டில் மாதவிடாய் என்பது மிகப்பெரிய மூட நம்பிக்கையுடன் பின்னப்பட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் எப்படி சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை பெண்களுக்கு கற்பிக்க வேண்டும்." என்றார்.

மேலும், "பெண்களின் சுகாதாரம் பற்றிப் பேச தயக்கம் காட்டுகின்றனர். ஒரே நாளில் மாற்றம் நிகழாது. படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாதவிடாய் பற்றியும் பெண்களின் சுகாதாரம் பற்றியும் தயக்கமில்லாமல் பேசுவதே விழிப்புணர்வின் முதல்படி” என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்