ஆப்நகரம்

கணவரின் பெயரை தொடையல் பச்சைக் குத்தியுள்ள ராதிகா ஆப்தே!

பிரபல ‘கபாலி’ பட நடிகை ராதிகா ஆப்தே, தன் கணவர் பெயரை தன் தொடையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பச்சைக் குத்தி வைத்துள்ளார்.

Samayam Tamil 8 May 2019, 3:08 pm
‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அதையடுத்து ‘வெற்றிச் செல்வன்’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே இவரை தமிழ் திரையுலகில் ரசிகர்களிடம் அடையாளப்படுத்தவில்லை.
Samayam Tamil radhika-apte_1


இவர் ரஜினிக்கு மனைவியாக ‘கபாலி’ படத்தில் நடித்தார். இந்த ஒரு படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். அதையடுத்து இந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ், ‘பர்ஷத்’ ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ளது. இவர் எப்போதும் எங்கும் துணிச்சலோடு பேசக்கூடியவர். அதுவும் பாலிவுட் சினிமாவில் நடிகைகள் சொல்ல வேண்டும் என்றால் கங்கனா ரணாவத், ராதிகா ஆப்தே என சொல்லலாம் .ஏதாவது ஒரு விஷயத்தை குறித்து பேசி விட்டு பின் அதன் பிரச்சனையிலும் சிக்குவார்கள்.

படு கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராதிகா ஆப்தே!

இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகிறது, அதை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து பேசுகின்றனர். அது என்னவென்றால் அவரது கணவர் பெனிடிக் டெய்லரின் ஆங்கிலத்தில் முதல் எழுத்து ‘பி’ என்பதை தொடையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிகவும் சின்னதாக பச்சை குத்தியுள்ளார். இதைப்பார்த்து ரசிகர்களோ கணவர் பெயரை அங்கேயா பச்சை குத்துவது என்று கேட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்