ஆப்நகரம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க ஆசைப்படுகிறேன் - ராதிகா ஆப்தேயின் அதிரடி பேச்சு !!

ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ராதிகா ஆப்தே பேசியுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் பலரை வெவ்வேறு சூழ்நிலைகளில் நான் காதலித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.

Samayam Tamil 13 Jul 2019, 12:48 pm
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் இந்திய மரபு. இந்த தலைமுறை அதை உடைத்து வருகிறது. பிரபல நடிகை ராதிகா ஆப்தே தனக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் பலரைக் காதலிப்பதில் தவறில்லை என்றும் தினமும் ஒருவரைக் காதலிப்பதும் தவறில்லை என்றும், அதிரடியாக பேசியுள்ளார்.
Samayam Tamil 541348

நடிகை ராதிகா இந்தியில் பிரபல நடிகையாக விளங்குபவர். தமிழில் கார்த்தி ஜோடியாக 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தில் நடித்தார். பின் ரஜினி ஜோடியாக "கபாலி" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மற்றவர்கள் ஏற்கத் தயங்கும் கேரக்டர்களை ஏற்று நடிப்பதில் வல்லவர். மிகத் துணிச்சலான நடிகை எனப் பெயர் பெற்றவர்.

தளபதி விஜய், விஜய்சேதுபதி மோதல் இப்படி ஆகிவிட்டதே !


சமீரா ரெட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது: புகைப்படத்தை வெளியிட்ட சமீரா!

இந்திப் படம் ஒன்றில் நிர்வாணக் காட்சியிலும், உடலுறவு காட்சியிலும், நடித்து பரபரப்பை கிளப்பியவர். அவரின் நடிப்பு மட்டுமல்லாது அவ்வப்போது அவரின் கருத்துக்களும் பரபரப்பை தோற்றுவிக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியயில் ராதிகா ஆப்தே கூறியுள்ள கருத்துக்கள் தான் இப்போது அதிர்ச்சியாக உள்ளது. அந்தப்பேட்டியில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்றும், அது பழமையான விசயம் எனக்கு அதில் நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார்.

பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத்தின் அழகான புகைப்படங்கள்!
மேலும் தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம் என்ற அவர், அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை என்றார். நான் பலரை காதலிக்கவே விரும்புகிறேன் மேலும் அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு ஒவ்வொரு நாளும் தேவை என்றும் நடிகை ராதிகா ஆப்தே படு துணிச்சலாக பேசியுள்ளார். பலருடன் காதலில் ஈடுபடுவது தவறில்லை அதில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் பலரை வெவ்வேறு சூழ்நிலைகளில் நான் காதலித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே. நடிப்பு, நடிப்பு ஆகியவற்றை நான் எப்படி காதலிக்கிறேனோ அதுபோல் தான் காதலும் அதற்கு கடுப்பாடுகள் வைப்பது தவறு என்று கூறியுள்ளார்.


நடிகை ராதிகா ஆப்தே, பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து வாழ்ந்து வரும் ராதிகா ஆப்தே இப்படி ஒரு கருத்து கூறியுள்ளது ரசிகரளிடம் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்