ஆப்நகரம்

படம் எடுத்தது போதும் ரிட்டயர்ட் ஆகுங்க : ராதிகா ஆப்தே!

நடிகைகளுக்கு தரப்படும் பாலியல் தொல்லைகள் பற்றி நடிகை ராதிகா ஆப்தே, துணிச்சலாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

Samayam Tamil 16 Mar 2018, 11:33 pm
மும்பை : நடிகைகளுக்கு தரப்படும் பாலியல் தொல்லைகள் பற்றி நடிகை ராதிகா ஆப்தே, துணிச்சலாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
Samayam Tamil radhika asks ram gopal varma to retire from cinema
படம் எடுத்தது போதும் ரிட்டயர்ட் ஆகுங்க : ராதிகா ஆப்தே!


நேஹா தூபியா நடத்தும் டாக் ஷோவில் பங்கேற்ற நடிகை ராதிகா கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய பதில்களைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் குறிப்பாக டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய டைரக்டர் யார் என்ற கேள்விக்கு அவரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய ராம்கோபால் வர்மா பேரையே தெரிவித்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் 'கபாலி' படத்தில் நடித்தது அவருக்கு பெரிய அங்கீகாரமாக அமைந்தது. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வித்தியாசமான வேடங்களில் நடித்து பெயர் வாங்கி வருகிறார் ராதிகா.

தெலுங்கு சினிமாவில் ராதிகா ஆப்தேவை அறிமுகம் செய்ததே ராம் கோபால் வர்மா தான். அவரையே ஓய்வு பெறச் சொல்லியிருக்கிறார்.

இதே நிகழ்ச்சியில், சினிமாவில் பாலியல் தொல்லை பற்றிப் பேசும்போது, தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் கூறினார்.

Actress Radhika Apte has been boldly telling about casting couch. Radhika asks Ram gopal varma to retire from cinema.

அடுத்த செய்தி

டிரெண்டிங்