ஆப்நகரம்

மீண்டும் ஆசிரியராக நடிக்கும் ராதிகா

‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த ராதிகா மீண்டும் ஆசிரியராக நடிக்கவுள்ளார்

TOI Contributor 21 Jun 2016, 7:29 pm
‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த ராதிகா மீண்டும் ஆசிரியராக நடிக்கவுள்ளார்
Samayam Tamil radhika prasidhha again teacher in new movie
மீண்டும் ஆசிரியராக நடிக்கும் ராதிகா


அறிமுக இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் வெளிவந்த ‘குற்றம் கடிதல்’ படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்தவர் ராதிகா பிரசித்தார். தனது ஈர்ப்பான நடிப்பால் படம் முழுவதையும் ஆக்கிரமித்து விமர்சகர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டை பெற்ற ராதிகா பிரசித்தா, தற்போது மீண்டும் ஆசிரிரயையாக விஜய் மில்டன் இயக்கும் ‘கடுகு’ படத்தில் நடித்து வருகிறார்.

தனது கதாபத்திரத்தை பற்றி ராதிகா பிரசித்தா கூறும்போது, ‘கடுகு’ படத்திலும் நான் ஆசிரியையாக நடித்து இருக்கிறேன். ஒரே கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரே சாயல் வராம பார்த்துகிட்டோம். கடலூரில் உள்ள ஒரு கிராமத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

நான் நடித்த காட்சிகளில் ராஜகுமாரனுடன் நடித்த காட்சிகள் தான் அதிகம், இருந்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை, காதலை தாண்டி அவருக்கு தோழியாகத்தான் நடித்து இருக்கிறேன் என்றார்.

‘கடுகு’ படத்தில் ராஜகுமார், பரத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ராஜகுமாரன் புலிவேஷ கலைஞராக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக 3 மாதம் புலிவேஷ கலைஞர்களை வைத்து ராஜகுமாரனுக்கு பயிற்சிகள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்