ஆப்நகரம்

ஒரு டுவிட்டி ஒரு வீடு: பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழகத்தை புரட்டிப் போட்ட புயல்களில் ஒன்று கஜா புயல். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்துள்ளார். இதன் பின்னனி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

Samayam Tamil 19 May 2019, 7:01 pm
தமிழகத்தை புரட்டிப் போட்ட புயல்களில் ஒன்று கஜா புயல். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்துள்ளார். இதன் பின்னனி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
Samayam Tamil raghava Lawrence


தமிழகத்தில் கஜா புயல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாக்கியது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்கள், வாழ்வாதாரமான மரங்கள் இழந்தனர். பலர் வீடுகளை இழந்து பெரிய இன்னலுக்கு ஆளாகினர்.

இந்த புயலுக்கு முன்னர் நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டாலும், புயல் தாக்கிய பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சந்திக்க முடியாத, அவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அரசு பெரிய சிக்கலை சந்தித்தது.

ஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீடு - கமல், ஷங்கர், பாக்கியராஜ் சுவார்ஸ்ய பேச்சு

உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என பலர் இன்றளவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாட்டிக்கு வீடு தேவை:
இந்நிலையில் வீடு இழந்த ஆதரவற்ற ஒரு பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்தால் நல்லது என நடிகர் ராகவா லாரன்ஸுகு சிலர் தகவல் அனுப்பினர். டுவிட்டரிலும் பதிவிட்டதாக கூறப்படுகின்றது.

அடுத்த ஆஸ்கர் விருது இருவருக்கு தான்!- ரஜினி கணிப்பு

புதுவீட்டில் பாட்டி:
பல்வேறு சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை காட்டி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

அழகை மெருகேற்ற சிக்ஸ் பேக் உடன் தலை கீழ் யோக செய்யும் அமலா பால்!

அதில், “என் அன்பு நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம்!
கஜா புயல் காரணமாக வீடு இழந்த ஒரு பாட்டிக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ள வீட்டின் புகைப்படத்தை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வீடு இழந்த பாட்டி குறித்து என் அறிவுக்கு கொண்டு வந்த அந்த நண்பருக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என பதிவிட்டுள்ளார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்