ஆப்நகரம்

அம்மா உணவகத்திற்கு ரூ. 50 லட்சம் கொடுத்த ராகவா லாரன்ஸ்

உணவின்றி தவிப்பவர்களுக்கு இலவச உணவு வழங்க அம்மா உணவகங்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 21 Apr 2020, 11:00 am
கோரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. அதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை. வணிக நிறுவனங்கள், கடைகள் என எதுவுமே தற்போது செயல்படவில்லை.
Samayam Tamil Raghava Lawrence donates 50 Lakh rupees to Amma Unavagam


மேலும் பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. செயல்படும் சில உணவகங்களில் பார்சல் மட்டுமே எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவ பல தன்னார்வளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் அரசு நடத்திவரும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துளளார். இதற்கான காசோலையை நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளார் அவர்.

இதற்காக அவருக்கு நன்றி கூறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் பல கோடி ரூபாய்க்கு உதவி தொகை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் மூன்று கோடி ருபாய் உதவியை அறிவித்தார் லாரன்ஸ். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், தமிழக அரசுக்கு 50 லட்சம், FEFSI அமைப்புக்கு 50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம், மாற்று திறனாளிகளுக்கு 25 லட்சம், அவரது பிறப்பிடமான சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள தின கூலி வேலை செய்பவர்களுக்கு 75 லட்சம் என பிரித்து வழங்கினார்.

அதன் பிறகு நடிகர் சங்கத்திற்கு 25 லட்சம், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார் லாரன்ஸ்.

அது மட்டுமின்றி தனது அடுத்த பட சம்பளத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயை நேரடியாக தூய்மை பணியாளர்களுக்கு கொடுத்துவிடும்படி தயாரிப்பாளரிடம் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்