ஆப்நகரம்

போஸ்டர் மீது சாணி வீச்சு: கமலை சந்தித்து விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ்

தர்பார் இசை வெளியீட்டு விழா சர்சைக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் கமஸ் ஹாஸனை சந்தித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 16 Dec 2019, 10:15 am
ரஜினிகாந்தின் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தான் சிறு வயதில் கமல் ஹாஸனின் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை பலரும் சமூக வலைதளங்களில் விளாசினார்கள், விளாசிக் கொண்டிருக்கிறார்கள். தான் பேசியதை வேண்டும் என்றே திரித்து பேசுவதாக அவர் தெரிவித்தார்.
Samayam Tamil raghava lawrence


இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாஸனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். கமல் ராகவா லாரன்ஸ் மேடையில் பேசியதை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

கமலை சந்தித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

நல்ல வேளை இந்த கருமத்தை தனுஷ் பார்க்கல: மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்ஸ்

எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.

ஹய்யோ, சீக்கிரம் 6.30 மணி ஆக மாட்டேங்குதே: வாட்ச்சை, வாட்ச்சை பார்க்கும் ரஜினி ரசிகர்கள்

எனது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட திரு. கமல் ஹாஸன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும், என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்