ஆப்நகரம்

கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன? ராகவா லாரன்ஸ் அறிக்கை

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் கொரோனா தொற்று உறுதியானது பற்றி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Samayam Tamil 29 May 2020, 1:15 pm
ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர். அவர் ஆதரவற்ற பல குழந்தைகளுக்கு உதவும் விதமாக ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார்.
Samayam Tamil Raghava Lawrence


சென்னை அசோக் நகரில் உள்ள டிரஸ்ட் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்கள் என மொத்தம் 21 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டது.

அவர்களின் நிலை என்ன என்பது பற்றி ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

"நான் செய்த சேவை என்னுடைய குழந்தைகளை காப்பாற்றும். நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம். நான் ஆதரவற்ற குலந்திகளுக்காக ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு வாரத்திற்கு முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது."

"பரிசோதனை செய்த போது 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. இதில் இரண்டு மாற்று திறனாளி பணியாளர்களும் அடக்கம். இது எனக்கு அதிக வருத்தத்தை கொடுத்தது. அதன் பிறகு மருத்துவர்களிடம் பேசியபோது அவர்கள் சிகிச்சையில் வேகமாக உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்தனர். அவர்களுக்கு காய்ச்சல் குறைந்து தற்போது இயல்பான நிலைக்கு வந்திருக்கிறது."

"அவர்களுக்கு கொரோனா பரிசோதனை டெஸ்ட் நெகட்டிவ் வந்த பிறகு அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என கூறியுள்ளனர்."

"இந்த சூழ்நிலையில் உதவிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு நன்றி. மேலும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பிஏ ரவி சார் மற்றும் கார்ப்பரேஷன் கமிஷ்னர் ஜி.பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி."

"நானா செய்த சேவை என் குழந்தைகளை காப்பாற்றும் என நம்புகிறேன். அனைவரும் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள். சேவை தான் கடவுள்" என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வரும் நிலையில், ராகவா லாரன்ஸ் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பிரதமரின் PM Cares நிதிக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கினார் அவர்.

மீதம் இருக்கும் தொகையில் சினிமா தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், நடன கலைஞர்கள், மாற்று திறனாளிகள் என பலருக்கும் வழங்கினார் அவர்.

தான் இயக்கிவரும் ஹிந்தி படமான லக்ஷ்மி பாம் படத்திற்காக வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை நேரடியாக PM Cares நிதிக்கு வழங்கிவிடும்படி கூறிவிட்டார் லாரன்ஸ்.

அது மட்டுமின்றி கொரோனா லாக்டவுனால் உணவு கூட கிடைக்காமல் பலர் அல்லாடி வரும் நிலையில் தனது 'தாய் பவுண்டேஷன்' மூலமாக அவர் அரிசி உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக பெற்று தேவை இருப்பவர்களுக்கு விநியோகித்து வருகிறார். மேலும் சென்னையில் சிக்கி இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முதலமைச்சரிடம் பேசி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்து உதவினார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்