ஆப்நகரம்

முதலமைச்சருக்கு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்! காரணம் இதுதான்

ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவும்படி ராகவா லாரன்ஸ் முதலமைச்சரை கேட்டிருந்தார். அதை ஏற்று போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Samayam Tamil 12 May 2020, 4:18 pm
சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். தன் வீட்டின் அருகில் 20ம் மேற்பட்டவர்கள் கூடியதாகவும், அவர்கள் ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர்கள். கொரோனா லாக்டவுனால் இங்கே உணவு, இருப்பிடம் இல்லாமல் திணறுகின்றனர்.
Samayam Tamil Raghava Lawrence


அவர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து நீண்ட நாட்காளாக உள்ளனர். திரும்பி செல்லவும் வழி இல்லை. அவர்களுக்கு நான் 15 நாட்களுக்கு உணவு வழங்குகிறேன். நீங்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவர்கள் திரும்பி செல்ல முதலமைச்சர் ஏற்பாடு செய்ததால் அவருக்கு நன்றி கூறி லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். "நான் வேண்டுகோள் வைத்த உடனேயே அதை பரிசீலித்த முதலமைச்சர், அவரது உதவியாளர் விஜயகுமார் தொடர்பு கொண்டார். ஒரு வாரத்திற்குள் அவர்களுக்கு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 37 பேரும் ரயில் மூலமாக ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு மனமார நன்றியை கூறி கொள்கிறேன்" என லாரன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்