ஆப்நகரம்

தூக்கமே வரவில்லை.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறேன்: ராகவா லாரன்ஸ்

3 கோடி ருபாய் உதவி அளித்த ராகவா லாரன்ஸ், மேலும் மக்களுக்கு உதவுவது பற்றி இன்று மாலை 5 மணிக்கு ஒரு முக்கிய முடிவை அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2020, 1:30 pm
நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவியாக 3 கோடி ரூபாயை சமீபத்தில் வழங்கினார்.
Samayam Tamil Raghava Lawrence


மத்திய அரசுக்கு 50 லட்சம், தமிழக அரசுக்கு 50 லட்சம், FEFSI அமைப்புக்கு 50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம், மாற்று திறனாளிகளுக்கு 25 லட்சம், அவரது பிறப்பிடமான சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள தின கூலி வேலை செய்பவர்களுக்கு 75 லட்சம் என மொத்தமாக 3 கோடி ரூபாயை வழங்கினார் ராகவா லாரன்ஸ்.

அடுத்து சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாகவும், அதை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தந்த அட்வான்ஸ் பணத்தில் தான் இந்த உதவியை செய்வதனாக லாரன்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மேலும் பலரும் தங்களுக்கு உதவி வேண்டும் என தன்னை அனுகி வருகின்றனர், அவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளார் அவர்.

இது பற்றி அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது..

"நான் செய்த உதவியை பாராட்டிய நண்பர்கள் மற்றும் மீடியாவுக்கு நன்றி. நான் இந்த உதவியை அளித்த பிறகு எனக்கு பல்வேறு அழைப்புகள் வருகிறது. துணை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் உட்பட பலரும் என்னிடம் உதவி கேட்டு அழைக்கின்றனர். பல கடிதங்கள் மற்றும் வீடியோக்களும் எனக்கு வருகிறது.

இதை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது. நான் அளித்த 3 கோடி இதற்கெல்லாம் போதாது. உண்மையாக சொல்ல போனால் என்னால் இதற்கு மேலும் நிதி உதவி அளிக்க முடியாது என தோன்றுகிறது. அதனால் அழைப்பு வந்தால் நான் பிஸியாக இருக்கிறேன் என கூறிவிடுங்கள் என எனது உதவியாளர்களிடம் சொல்லிவிட்டேன்.

என அறைக்கு சென்று அது பற்றி தீவிரமாக யோசித்தேன். நான் செய்தது எனக்கே தவறாக தெரிந்தது. நேற்று என்னால் தூங்கவே முடியவில்லை. மக்கள் அனுப்பிய விடீயோக்களைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

தீவிர யோசனைக்கு பிறகு எனக்கு ஒன்று தோன்றியது. இந்த உலகத்திற்கு வரும் போது எதுவும் கொண்டு வரவில்லை, எதையும் கொண்டு போக போவதும் இல்லை"

"அனைத்து கோவில்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. மக்களின் பசியின் தான் இறைவன் இருக்கிறார். பசியில் வாடுபவர்களுக்கு உதவினால் அது இறைவனுக்கு கொடுத்தது போன்றது."

"சேவை செய்வதை கடவுள் எனக்கு பணியாக கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். நம் அனைவருக்கும் இது மிகவும் முக்கியமானநேரம். அதனால் என்னால் முடிந்ததை அரசு மதுரம் மக்களுக்கு செய்ய விரும்புகிறேன்.எனக்கு ஆடிட்டரிடம் பேசிவிட்டு மாலை 5 மணிக்கு அறிவிப்பை வெளியிடுகிறேன்" என லாரன்ஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்