ஆப்நகரம்

Vetrimaaran: பிரபல நடிகருடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்த படம் டிராப்பா.?: வெளியான பரபரப்பு தகவல்.!

ராகவா லாரன்ஸின் 'அதிகாரம்' படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்திகள் குறித்து படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 23 Nov 2022, 5:41 pm
முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 எனத் தொடர்ச்சியாக ஹாரர் காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ராகவா லாரன்ஸ். கடைசியாக 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் நடிப்பில்'லக்ஷ்மி' என்ற பெயரில் இந்தியில் இயக்கினார்.
Samayam Tamil அதிகாரம்
அதிகாரம்


முனி சீரிஸ் படங்களை தொடர்ச்சியாக இயக்கி வந்ததுக்கு பலரால் லாரன்ஸ் ட்ரோல் செய்யப்பட்டாலும், இவரின் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவரின் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது. இடையில் நடிப்பில் கவனம் செலுத்திய இவர் தற்போது ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் ராகவா லாரன்ஸ், முதன்முதலாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார். வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுத, ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்குவார் என முடிவானது. இதனை தொடர்ந்து படத்திற்கு அதிகாரம் என்ற தலைப்புடன் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

Amir, Pavani Reddy: அது நடந்து ஒரு வருடம் ஆகிருச்சு: உருகும் அமீர், பவானி.!

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் துரை செந்தில்குமார் நயன்தாராவின் புதிய படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இதனால் 'அதிகாரம்' படம் டிராப் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்தது.

Chiyaan Vikram: 'தங்கலான்' படத்துக்காக தீயாய் வேலை செய்யும் விக்ரம்: வெறித்தனமான நியூ லுக்.!

இந்நிலையில் இதுக்குறித்து அதிகாரம் படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். அதில், “அதிகாரம் படம் கைவிடப்பட்டதாக பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரம் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் ஷூட்டிங் குறித்த திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதை அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக 'அதிகாரம்' படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்