ஆப்நகரம்

எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பின் ஐநா-வில் பாடும் ஆஸ்கர் நாயகன்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான், இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் பாடல் பாடவிருக்கிறார்.

TNN 29 Jul 2016, 12:27 pm
புதுதில்லி: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான், இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் பாடல் பாடவிருக்கிறார்.
Samayam Tamil rahman to perform at un to mark 70th i day
எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பின் ஐநா-வில் பாடும் ஆஸ்கர் நாயகன்


கர்நாடக சங்கீதத்தின் கலைத் தாய் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா.வில் பாடும் இரண்டாவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் ஆவார். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஐ.நா.வில் ஏ.ஆர்.ரகுமான் 'வந்தே மாதரம்' பாடலை பாடவிருக்கிறார்.

கடந்த ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், 2014 ஆம் ஆண்டில் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதன் முறையாக உரையாற்றினார்.

இந்தியாவின் ஒரு பன்முக கலாச்சாரத்தை விவரிக்கும் வகையில் ரகுமானின் 'தில் சே'வில் இருந்து 'சர்சாரியா' வரை உள்ள பாடல்களை பாடவிருக்கிறார். இந்திய இசையின் புகழ்பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஏ.ஆர்.ரகுமான் ஐ.நாவில் பாடவிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்