ஆப்நகரம்

'அச்சம் என்பது மடமையடா': திரையரங்கில் கண்டுகளித்த ஆஸ்கர் நாயகன்

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்துள்ளார்.

TNN 14 Nov 2016, 1:58 pm
சென்னை: இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்துள்ளார்.
Samayam Tamil rahman watches achcham yenbadhu madamaiyada
'அச்சம் என்பது மடமையடா': திரையரங்கில் கண்டுகளித்த ஆஸ்கர் நாயகன்


சிம்பு மற்றும் மஞ்சிமா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரொமேண்டிக் ஆக்ஷன் படமான 'அச்சம் என்பது மடமையடா' படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பல கோடி வசூல் சாதனை படைத்து வருகிறது. விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை ஆஸ்கர் நாயகனும், படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சென்று பார்த்துள்ளார்.
LIVE on #Periscope: AYM live from Satyam cinemas Chennai ... https://t.co/yaukvjAMf1 — A.R.Rahman (@arrahman) November 13, 2016 இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'சத்யம் சினிமாஸில் இருந்து லைவாக 'அச்சம் என்பது மடமையடா' என்றும், இடைவெளிக்குப் பிறகு மேலும் அச்சம் என்பது மடமையடா என ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
LIVE on #Periscope: More AYM .....post interval .... https://t.co/QHubEORjik — A.R.Rahman (@arrahman) November 13, 2016 சத்யம் திரையரங்கிற்குள் நுழையும் போது அவரை வரவேற்கும் விதமாக 'தள்ளிப்போகாதே..' பாடல் ஒலிப்பரப்பானதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்து ரசித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ரகுமான் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்