ஆப்நகரம்

ராஜ ராஜ சோழன் விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் விரைவில் கைது!

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ரஞ்சித் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Jun 2019, 4:21 pm
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பா.ரஞ்சித். தலித் மக்களுக்கு குரல் கொடுப்பதில் எப்போதும் முன்னனியில் இருப்பவர். மேலும், அம்மக்களிடையே ஒரு அடையாளமாக பார்க்கப்படுபவர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தஞ்சையில் நடந்த கூட்டம் ஒன்றில் ராஜராஜ சோழன் பற்றி ரஞ்சித் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Samayam Tamil ranjith


இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுக்கவே திருப்பனந்தாள் காவல்துறை ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய காத்திருந்தனர். இந்த வழக்கில் ரஞ்சித்தை கைது செய்ய மதுரை கிளை தடை விதித்தது.

மேலும், வரும் 21ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்திருந்தது. அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஞ்சித்தை கைது செய்வதற்காக தடை உத்தரவை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இயக்குனர் பா.ரஞ்சித் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்