ஆப்நகரம்

இதனால் தான் ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தேன்: RRR இயக்குநர் ராஜமௌலி கூறிய காரணம்

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஆலியா பட்டை தேர்ந்தெடுக்க அவரது அப்பாவித்தனமான நடிப்பு தான் காரணம் என கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Apr 2020, 4:36 pm
பாகுபலி படம் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட ஒன்று என்பதால் அவரது அடுத்த படமான RRR படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு RRR மோஷன் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பே அதை உறுதிப்படுத்தியது.
Samayam Tamil Alia Bhatt and RRR team


ராம் சரண் நடித்துள்ள அல்லுரி சீதாராம ராஜு கதாபாத்திரம் தீயை பிரதிபலிப்பது போலவும், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள கொமாரம் பீம் கதாபாத்திரம் தண்ணீரை பிரதிபலிப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தீயை அணைக்கும், தீ தண்ணீரை ஆவியாகும், அவர்கள் இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என்பது தான் படத்தின் கதை.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர். ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி ராஜமௌலி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

"இது லவ் triangle கதை அல்ல. அதனால் ஆலியா பட் ராம் சரண் அல்லது ஜூனியர் என்டிஆரின் ஜோடி என கூற முடியாது. ஆனால் அவரால் அப்பாவித்தனமாக, பாதிக்கப்பட்டவராக கச்சிதமாக நடிக்க முடியும். அந்த காதாபாத்திரத்தில் நான் எதிர்பார்த்தது அதுதான். அதற்கு ஆலியா பட் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்ந்தெடுத்தேன்."

"ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு இணையாக தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் பெண்ணாக ஆலியா பட் கச்சிதமாக நடிப்பார்" என ராஜமௌலி கூறியுள்ளார்.

"ஆலியா பட் இந்த படத்திற்கு தனது பகுதிகளை ஏப்ரல் மாதத்திலேயே நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் மீண்டும் ஷூட்டிங் அட்டவணையை மாற்றி அமைக்கவேண்டி உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுளளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்