ஆப்நகரம்

அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் இயக்குனர் ராஜமௌலி!

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி அடுத்தடுத்து வரிசையாக இரண்டு படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.

TNN 14 Oct 2017, 1:57 pm
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி அடுத்தடுத்து வரிசையாக இரண்டு படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.
Samayam Tamil rajamouli will direct continuously 2 movies
அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் இயக்குனர் ராஜமௌலி!


‘பாகுபலி’ என்ற இரண்டு பிரமாண்ட படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்து விட்டு தற்போது சற்று ஓய்வில் இருந்து வருகிறார் இயக்குனர் ராஜமௌலி. அவரது அடுத்த படம் என்னவென்று ஆவலுடன் பலரும் எதிர்ப்பார்த்து இருந்த நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் ராஜமௌலி.

சமூக வரலாற்றுப் படத்தை இயக்கிவிட்ட அவர் அடுத்ததாக, சமூக பிரச்சைனையை கையில் எடுக்கவுள்ளார். ஆம், சமூக அக்கறையுடன் கூடிய படமொன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இப்படம் எந்த மொழியில் எடுக்கபப்டும் யார் நாயகன், நாயகி என்ற எந்த ஒரு தகவலையும் அவர் வெளியிடவில்லை. இந்த படத்தை முடித்தவுடன் 2019 ஆம் ஆண்டு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்