ஆப்நகரம்

திருச்சி மாநாட்டுக்கு வாருங்கள்..! ரஜினி ரசிகர்களுக்கு திடீர் அழைப்பு

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TNN 5 Aug 2017, 1:55 pm
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rajini called his fans to a trichy congress
திருச்சி மாநாட்டுக்கு வாருங்கள்..! ரஜினி ரசிகர்களுக்கு திடீர் அழைப்பு


சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தபோது அவர்களிடம் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை.. போர் வரும்போது பார்த்துக்கொள்வோம். தயாராக இருங்கள்.. என்று பேசினார். ரஜினியின் பேச்சால் ரசிகர்கள் பரபரப்பானார்கள். அவரின் இந்த பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே சுட்டிக் காட்டியது. ஆனால், ரஜினி ‘காலா’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். தனது அரசியல் பிரவேசம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் அவர் வெளியிடவில்லை.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அவர் பேசிவிட்டு வந்த பின் அளித்த பேட்டியில் ‘‘ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார், அவரோடு காந்திய மக்கள் இயக்கமும் சேர்ந்து பயணிக்கும்’’ என்று கூறினார்.

இந்நிலையில், வருகிற 20ம் தேதி காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கலந்து கொள்ள ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் அந்த மாநாட்டில் ரஜினி கலந்து கொள்வாரா, மாட்டாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்