ஆப்நகரம்

கொரோனா நிதி அதிகம் கொடுத்தது யார்?: சண்டையில் விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர்

நடிகர்கள் கொரோனா நிவாரண நிதி கொடுத்துள்ள நிலையில், அது தொடர்பான சண்டையில் விஜய் ரசிகர் ஒருவரை ரஜினி ரசிகர் அடித்து கொலை செய்துள்ளார்.

Samayam Tamil 24 Apr 2020, 10:59 am
கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க அரசு போராடி வரும் சூழலில் அதற்கு உதவும் விதத்தில் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். அஜித், விஜய் உட்பட பல்வேறு சினிமா நடிகர்கள் இதுவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவி அளித்துள்ளனர்.
Samayam Tamil Vijay and Rajinikanth


இந்நிலையில் எந்த நடிகர் அதிக கொரோன நிவாரண நிதி கொடுத்தது என்ற சண்டையில் விஜய் ரசிகர் ஒருவரை ரஜினி ரசிகர் அடித்து கொண்டுவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த 22 வயது இளைஞர் யுவராஜ் என்பவர் தீவிர விஜய் ரசிகர். மேலும் அதே பகுதியில் இருக்கும் தினேஷ் பாபு தீவிர ரஜினி ரசிகர். அவருக்கும் 22 வயது ஆகிறது.

இவர்கள் இருவரும் நண்பர்கள். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும், அவர்கள் இருவரும் நேற்று கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்தியுள்ளனர்.

போதையில் இருந்த போது "கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது" என அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதலில் கொடுத்தது ரஜினி தான் என தினேஷ் கூற, அதிகம் கொடுத்தது விஜய் தான் என பதில் கொடுத்துள்ளார் யுவராஜ்.

இந்த வாக்குவாதம் சண்டையாக மாறி, தினேஷ்பாபு யுவராஜை தாக்கி கீழே தள்ளியுள்ளார். அப்போது கல் அவரது தலையில் தாக்கியுள்ளது.

அதில் சம்பவ இடத்திலேயே யுவராஜ் உயிரிழந்துள்ளார். போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து ரஜினி ரசிகரான தினேஷ் பாபுவை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்