ஆப்நகரம்

பெரியார் தோற்றத்தில் ரஜினிகாந்த்தின் புதிய அவதாரம்!!

நடிகர் ரஜினிகாந்துக்காக அவரது ரசிகர்கள் வைத்த பேனர் தற்போது சமூகவலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 27 Mar 2018, 1:11 pm
நடிகர் ரஜினிகாந்துக்காக அவரது ரசிகர்கள் வைத்த பேனர் தற்போது சமூகவலைதளங்கலில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil sak.jnflnalsnd


கடந்த 1996 ஆம்ஆண்டில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டார ? என்ற கடினமான கேள்விக்கு , 2017 ஆம் ஆண்டில்தான் விடை கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி, தமிழகத்தின் அடுத்த சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவது உறுதி என்று அறிவித்தார். இதையடுத்து தனது ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார்.

ஆனால் அவர் கட்சி, சின்னம்மற்றும் கொள்கை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஆனால் ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் அவரை பாஜக இயக்குவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதற்கு பதில் அளித்த ரஜினி தனக்கு பின்னால் பாஜக இல்லை என்றும் மக்கள்தான் உள்ளனர் என்றும் கூறினார். மேலும் தான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று சமீபத்தில் இமாலயப் பயணம் மேற்கொண்டு இருந்தபோது தெரிவித்து இருந்தார். இதை அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்து இருந்தார். அரசியலுக்கு வருவதாகக் கூறிவிட்டு ஆன்மிக பயணம் சென்றுவிட்டார் என்று அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்மீகப் பெரியாரே எனக் கூறி ரஜினியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் ரஜினிக்கு பெரியார் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. பேனர் வாசகத்தில்,''ஆன்மிக பெரியாரே வணங்குகிறோம்'' என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த பேனர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்