ஆப்நகரம்

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஏப்ரல் 2ல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!!

கடுமையான எதிர்ப்பையடுத்து இலங்கைப் பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தனது ரசிகர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

TOI Contributor 29 Mar 2017, 6:33 pm
கடுமையான எதிர்ப்பையடுத்து இலங்கைப் பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தனது ரசிகர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil rajinikanth calls fan club members for crucial meeting on april 2nd at raghavendra kalyana mandapam
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஏப்ரல் 2ல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!!


இலங்கையில் தமிழர்களுக்காக லைகா நிறுவனத்தின் ஞானம் பவுண்டேசன் 150 வீடுகள் கட்டியுள்ளது. இந்த வீடுகளை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்ளுக்கு வழங்கும் விழா வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வடக்கு வவுனியாவில் நடக்கிறது. விழாவில் தமிழர்களுக்கு வீடுகள் வழங்க ரஜினிகாந்துக்கு லைகா நிறுவனம் அழைப்பு விடுத்து இருந்தது. ரஜினியும் அழைப்பை ஏற்றுக் கொண்டார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வை.கோபால்சாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம்தான் ரஜினிகாந்த் நடித்து வரும் ''2.0'' படத்தையும் தயாரித்து வருகிறது. இதையடுத்து தனது அறிக்கை மூலம், ''மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, நான் உங்களை சந்திக்கிறேன்'' என்று இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ரஜினி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இந்தக் கூட்டத்தில், ரஜினி கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது ரசிகர்கள் கூடி எடுக்கும் முடிவுகள் பின்னர் அவரிடம் வழங்கப்படும் என்று மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.

Rajinikanth calls fan club members for crucial meeting on April 2nd at raghavendra kalyana mandapam

அடுத்த செய்தி

டிரெண்டிங்