ஆப்நகரம்

ரஜினியிடம் இருந்து திடீர்னு வந்த போன் கால்: திக்குமுக்காடிப் போன 'தனுஷ்கோடி'

Maanaadu: ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து வாழ்த்திய சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

Samayam Tamil 28 Nov 2021, 8:26 am
மாநாடு படம் பார்த்த ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யாவுக்கு போன் செய்து வாழ்த்தியிருக்கிறார்.
Samayam Tamil rajinikanth calls sj suryah appreciates him for maanaadu
ரஜினியிடம் இருந்து திடீர்னு வந்த போன் கால்: திக்குமுக்காடிப் போன 'தனுஷ்கோடி'


மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. சிம்புவுக்கும், எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையேயான ஆடு புலி ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. படம் பார்த்த அனைவரும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி

மாநாடு படத்தை பார்த்த ரஜினியால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதையடுத்து வெங்கட் பிரபு, சிம்புவுக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார். மேலும் வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் போன் செய்து மனதார பாராட்டியுள்ளார். ரஜினியே போன் போட்ட சந்தோஷத்தை ட்விட்டரில் தெரிவித்து, துள்ளிக் குதிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

வசூல்

மாநாடு படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூல் செய்தது. மாநாடு படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் ரிலீஸாவதில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இரவோடு இரவாக பிரச்சனையை தீர்த்து படத்தை வெளிட்டது வீண் போகவில்லை.

சிம்பு

மாநாடு படம் சிம்புவின் கெரியரில் முக்கியமானதாக அமைந்துவிட்டது. அவர் தொடர்ந்து இது போன்று நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்தால் விரைவில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்துவிடுவார் என்கிறார்கள் ரசிகர்கள். அவர் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்