ஆப்நகரம்

ரஜினிக்கு உளவுத்துறை ஸ்கெட்ச்: தப்பிக்க காரிலேயே ஆலோசனை?

ரஜினிக்கு உளவுத்துறை ஸ்கெட்ச் போடுவதால், அவர் காரிலேயே ஆலோசனை நடத்துவதாக தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 11 Feb 2018, 7:46 am
ரஜினிக்கு உளவுத்துறை ஸ்கெட்ச் போடுவதால், அவர் காரிலேயே ஆலோசனை நடத்துவதாக தகவல் பரவி வருகிறது.
Samayam Tamil rajinikanth discuss his political activities in car
ரஜினிக்கு உளவுத்துறை ஸ்கெட்ச்: தப்பிக்க காரிலேயே ஆலோசனை?


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் தான் வசித்தார். அவர் இறந்த பிறகு அவரது வீட்டில் இருந்த சசிகலாவால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது போயஸ் கார்டனில் வசிக்கும் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் கட்சி தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது உளவுத்துறை போலீசார் போயஸ் கார்டன் வீட்டைச் சுற்றி ரோந்து வருகிறார்களாம்.

இதன் காரணமாக ரஜினியோ, எந்தவொரு ஆலோசனையும் போயஸ் கார்டன் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தனது அரசியல் குறித்த எந்த ஆலோசனையாக இருந்தாலும், ராகவேந்திரா மண்டபத்திலோ அல்லது கேளம்பாக்கத்திலுள்ள அவரது பண்ணைவீட்டிலோ தான் நடத்துகிறாராம். இப்போது, இந்த இரு இடங்களிலும் உளவுத்துறை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனராம்.

அதனால், தனது அரசியல் குறித்த ஏதாவது முக்கிய ஆலோசனையாக இருந்தால், அதனை ஏதாவது ஒரு காரில் வைத்து முடித்துவிடுகிறாராம். மேலும், இந்த ஆலோசனைக்காக ஒரே காரையும் அவர் பயன்படுத்துவதில்லையாம். யாருடன் அவர் ஆலோசனை நடத்துகிறாரோ அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு, அங்கேயே ஆலோசனையை முடித்துவிட்டு, அவர்களை வீட்டிலேயே இறக்கிவிட்டு மண்டபத்திற்கு செல்கிறாராம். பின்னர், அங்கிருந்து தனது காரில் வீட்டிற்கு வந்துவிடுகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்