ஆப்நகரம்

புல்வாமா தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

"காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது; வீர மரணம் அடைந்திருக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்" என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 15 Feb 2019, 6:59 pm
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajini-01


ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சுப்பிரமணியன் என்பவர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்தவர். சிவ சந்திரன் என்பவர் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்தவர். இவர்களுடைய குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குதவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளதுடன் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

"காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது; வீர மரணம் அடைந்திருக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்