ஆப்நகரம்

ஆசையாய் எதிர்பார்த்து ஏமாந்து போன ரஜினி ரசிகர்கள்

சேலத்தில் ரஜினியின் கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

Samayam Tamil 8 Jan 2020, 3:56 pm
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை கொண்டாட ரஜினி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்களில் ரஜினிக்கு பிரமாண்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil darbar

ரஜினியே தர்பாருக்காக படு ஸ்டைலாக மாறியுள்ள நேரத்தில் சிவாஜி படத்தில் வந்த மொட்டை கெட்டப்பில் எல்லாம் கட்அவுட் வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மெய்யனூரில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ரஜினி பேனருக்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி அளிக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

மலர் தூவ அனுமதி கேட்ட திரையரங்கப் பகுதியில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். மக்களுக்கு இடையாறு ஏற்படும் வகையில் எந்த செயலுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

Rajinikanth கடவுளே, நாளைக்கு ரஜினிக்கு 'அந்த சென்டிமென்ட்' மட்டும் ஒர்க்அவுட் ஆகவே கூடாது

அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் எதையும் செய்ய ரஜினியே விரும்ப மாட்டார் என்பதால் மனதை தேற்றிக் கொண்டுள்ளனர்.

ரஜினி ரசிகர்களுக்கு அனுமதி கிடைத்து ஹெலிகாப்டரில் மலர் தூவி விடுவார்களோ என்று எதிர்பார்த்தவர்களோ போலீஸ் சொன்னால் சரி தான் என்று தெரிவித்துள்ளனர்.

தர்பார் படத்தை ஏன் பார்க்கணும், எதுக்கு பார்க்கணும்?

அடுத்த செய்தி

டிரெண்டிங்